Sunday, October 7, 2012

மழை தந்த மழை

நீல மலைச் சாரலை  
வெள்ளி மழை மேகங்கள் 
குறையேதும் இல்லாமல்
நுரையோடு குளிப்பாட்ட 

ஓராடை அணியாமல்
சுற்றிவரும் மென்காற்று   
நீராடை அணிந்து கொண்டு
அங்குமிங்கும் சுற்றிவர 

அம் மண்ணும் நாணத்தால்  
செம்மண்ணாய்  உருமாறி 
காற்றடித்த வேகத்தால்  
கல்கொண்டு கண் மூட 

கள்ளொன்று இருந்தாலும்
ஆடாத பனைமரங்கள்
காற்று வந்த தள்ளியதும் 
ஆனந்தக் கூத்தாட 

கால் கொண்ட மேகமாய் 
சிறகடித்த நாரையும்
தன் மனைவி பேர்சொல்லி
கூடுதேடி பறபறக்க

யானையையே விழுங்கும்
கரும்புத் தோட்டங்கள் 
பச்சைப் பசுங்கடலாய் 
வெகுதூரம் பரந்திருக்க 

ஆள் யாரும் உளரோ என்று 
அக்கம்பக்கம் பார்த்துவிட்டு 
ஆசைக் காதலியின்
வழவழப்புக் கன்னத்தில் 
சற்றேனும் தாமதியாமல் 
வாயழுந்த முத்தமிட்டேன் ;

1 comment:

  1. முதல் வரி நீல மலைச் சாரலை என்று தொடங்கும்.....

    ReplyDelete