Thursday, May 19, 2011

ஃபிகரும் ஃபாரெக்ஸும் - ( தமிழில் குமரியும் குழந்தையும்)


இவர்கள் இருவரின்
வருகை சாமான்யப்பட்டதல்ல ;

காற்று வீசுதல் போல்
மழை தூவுதல் போல்

அது வெறும் சம்பவமல்ல -
சரித்திரம் ;

இவர்களின் வருகை
பெரும் ரகசியம் ;

அந்த ரகசியம்
யாருக்கும் தெரிவதில்லை ;
தெரிந்தாலும் அது
ஏனென்று புரிவதுமில்லை ;

ம்ம்...

ரகசியம் ரகசியமாய்
இருந்தால் தானே - அந்த
ரகசியத்திற்கு மதிப்பு !!

மழையைக் கொட்டிய
பின் மேகத்தை
யார் பார்க்கிறார்கள் ?!

உலகில்
இவர்கள் தான்
விளம்பரமில்லாத அதிசயங்கள் ;

குழந்தை - அதிசயங்களில்
முதல் அதிசயம் ;
குமரி - அதிசயங்களில்
முதன்மையான அதிசயம் ;

இந்த அதிசயங்கள்
மற்ற அதிசயங்கள்
போல் கிடையாது ;

மற்ற அதிசயங்கள்
சில நாடுகளில் தான்;
இந்த அதிசயங்களோ
எல்லா நாடுகளிலும்.....

இவர்கள் தலை
கோதினாலே அது
தலைப்புச் செய்தி ;

இவர்கள் கை
வீசினாலே அது
முக்கியச் செய்தி (லஶ் ணெவ்ஸ்) ;

ஆடையணிந்தால்
இவர்கள் அழகு ;
ஆடை களைந்தாலோ
இவர்கள் பேரழகு ;

இவர்களை மட்டுந்தான் - உலகம்
ஆடையோடும் ரசிக்கும்
ஆடையின்றியும் ரசிக்கும் ;

இவர்களின் முன்
அந்த இமயமே
வந்தாலும் சரி - அது
இறகு தான் ;

பொன், பொருள், புகழ்
அவையெல்லாமே இவர்களுக்குப்
பிறகு தான் ;

இவர்கள்
கருத்தில் இடம் பிடிக்க,
மனத்தில் தடம் பதிக்க

நாம் நம்மை
இழக்க வேண்டும் - பிடிக்காவிட்டாலும்
இந்த உண்மை
விளங்க வேண்டும் ;

ஊழிப் பெருங்காற்றைக் கூட
சமாளித்து விடலாம் ;

ஆனால் இந்த
ஊசிக்குள் நூல் சேர்ப்பது
என்பது அத்துணை
சுலபமானதா என்ன ?

நூலை அனுமதியாமல்
ஊசி போவதுமுண்டு ;

ஊசிக்குள் அகப்படாத
நூலோ அதனால்
ஊசிப்போவதுமுண்டு ;

சுருங்கச் சொன்னால்
அவர்கள் நம்மவர்களாக
நாம் "அவர்களாக" வேண்டும் ;

இந்த இருவர் தான்
கவிதைகளுக்கெல்லாம் தோற்றுவாய் ,
கனவுகளுக்கெல்லாம் ஊற்றுவாய் ;

இந்த இருவரில்
ஒருவர் - படைப்பின் அகரம்,
இன்னொருவர் - படைப்பின் சிகரம் ;

கணிப்பொறியில் செய்த
"மென்" பொருள்கள் ஏராளம் - ஆயின்
ஐம்பொறியில் செய்த
மென்பொருள்கள் இவர்கள் தானே !!!

இன்னும் இன்னும்
எழுதிக்கொண்டே போகலாம்...

ஆனால் ஒரு விஷயந்தான்
கொஞ்சம் நெருடலாயிருக்கிறது...

ஒரு
பச்சிளங்குழந்தையை - எளிதில்
எடுத்து தூக்கி
கொஞ்சி முத்தமிட்டு
மகிழ்ந்து கொள்ளலாம் ;

ஆனால் ஒரு
பச்சிளங்குமரியை..... ?!!!





Friday, May 6, 2011

உடைதல்


உலகிலேயே பலமுறை
உடைபடுவது பூசணிக்காய் தான்

அந்த வரிசையில்
இன்று நானும்....

பலமுறை உடைந்தது
என் உள்ளமும் தானே !!!

Tuesday, May 3, 2011

முரண்பாடு

என் பக்கத்து வீட்டு
இளந்தாய் ஒருத்தி
"பப்பிமா பப்பிமா"
என்று தன்
குழந்தையைக் கொஞ்சிக்
கொண்டிருந்தாள்...

மனிதர்களால் மனிதர்களைத்
தான் உருவாக்க
முடியும் என்ற
உண்மை தெரியாமல் !!!