Wednesday, August 10, 2011

மங்காத்தா - நீ நான்


பல்லவி

ஆண் :

கண்ணாடி நீ கண் ஜாடை நான்
என் வீடு நீ உன் ஜன்னல் நான்
என் தேடல் நீ உன் தேவை நான்
என் பாடல் நீ உன் வார்த்தை நான்
என் பாதி நீ உன் பாதி நான்
என் ஜீவன் நீ உன் தேகம் நான்
என் கண்கள் நீ உன் வண்ணம் நான்
என் உள்ளம் நீ உன் எண்ணம் நான்

பெண் :

கண்ணோடு வா நீ ஏ ஏ
மோகத் தாளம் போடு நீ ஏ ஏ
ராஜா இன்று வானோடு மேகங்கள் தீண்டாமல் தொட்டுச் செல்ல

என் மேனி நீ உன் ஆடை நான்
என் பேச்சு நீ உன் மேடை நான்
என் பாதை நீ உன் பாதம் நான்
என் தென்றல் நீ உன் வாசம் நான்

சரணம் - 1

ஆண் :

என்னை நீயென்று உணர்ந்து கொண்டேன்
உன்னை என்னோடு தொடர்ந்து நான் கண்டேன்

பெண் :

ஏதோ ஏதேதோ நடந்து நான் நின்றேன்
வானம் மேலே தான் பறந்து நான் சென்றேன்

ஆண் :

உன் கண்கள் ஓயாமல் என்னெஞ்சைத் தீயில் தள்ள

சரணம் - 2

பெண் :

தூரம் எல்லாமே உடைந்து போக
பாரம் எல்லாமே வளர்ந்து நோயாக

ஆண் :

வீரம் கொண்டாடும் கலைஞனாக
ஈரம் மண் மேலே விழுந்து தீயாக

பெண் :

தீராத போரொன்று நீ தந்து என்னை வெல்ல