Tuesday, February 28, 2012

வரம் ஒன்று கேட்டால்...

என் வருகைக்காக
பிரார்த்தனை செய்வார்கள் ;
நான் வந்ததும்
விழுந்து விழுந்து
உபசாரம் செய்வார்கள் ;

வேளா வேளைக்கு
சோறூட்டுவார்கள் ;
ஆசை ஆசையாய்
நீராட்டுவார்கள் ;

நான் அழுதால்
ஒடி வருவார்கள் ;
நான் சிரித்தால்
கூடி மகிழ்வார்கள் ;

என் ஒவ்வோர்
அசைவுக்கும் அர்த்தம்
சொல்வார்கள் ;

என் ஒவ்வோர்
செயலையும் சிலாகித்துப்
பேசுவார்கள் ;

மொத்தத்தில்
எனை ராஜாவாய்
தூக்கிக் கொண்டாடுவார்கள் ;

எனக்கு வேலையென்று
எதுவும் இல்லை

பேசாமல் தூங்கிக்
கொண்டே இருந்தால்
போதும் ;

நான் யாரென்று
கேட்கிறீர்களா ?

என்னைக் குழந்தை
என்று சொல்வார்கள்
எல்லோரும் ;

No comments:

Post a Comment