Sunday, February 19, 2012

வெயிலும் குளிரும்


உச்சி வெயில்
உச்சியைப் பிளந்தது ;
செய்வதறியாது திகைத்தேன் - கொடுஞ்சூட்டால்
எரிந்து புகைத்தேன் ;

அப்போது
பசுமாடு ஒன்று
"...மா" என்றது ;
அதற்குப் போட்டியாக
அதனருகே குட்டிப்போட்ட
ஆடொன்று முட்டிப்போட்டு
"மே...." என்றது ;
திடீரென்று எங்கிருந்தோ
வந்த காகமொன்று
ஆட்டின் தோளுரசி
"கா கா" என்றது ;
அதைக் கேட்ட
ஆலங்குயில் ஒன்று
"கூ கூ" என்றது ;
உடனே நெடுந்தூரத்தில்
பறந்த கிளிக்கூட்டமொன்று
"கீ கீ" என்றது ;
இதையெல்லாம் வெறித்துப்
பார்த்திருந்த தெருநாயொன்று
"..ள் ..ள்" என்றது ;

ஓ ! ஒண்டமிழே !!
நீ உன்னை
எவ்வாறு இந்த
ஜீவராசிகளுக்குக் கற்றுக் கொடுத்தாய் ?

ம்ம்....

வியற்றமிழே !!
வெயிலால் வெந்தவன் - இன்று
உன்னால் குளிர்ந்தேன்
உள்மனம் மலர்ந்தேன் ;

No comments:

Post a Comment