Saturday, December 22, 2012

ஒருநாள் போடியிலிருந்து ஓய்வு பெறும் சச்சினுக்காக...

சாதனை மன்னனே,
கிரிக்கெட்டின் கண்ணனே ,

ஒருநாள் போட்டியிலிருந்து
ஓய்வு பெறப்போவதாகக்
கூறிவிட்டாய் ;

நீ ஓய்ந்து போனாலும்
நீ அடித்த ஷாட்டின்
அலை ஓய்ந்து போகுமா ?

நீ பாட்டிங் ஆடி
பந்தாடும் காட்சி
ரசிகனின் மனதில்
நிலை மாறிப் போகுமா ?

உன்னோடு தானே
நாங்கள் வளர்ந்தோம் - நீ
எங்கெங்கு போனாயோ
அங்கங்கு போனோம் ;

பள்ளிக்குச் சென்றாலும்
பரிட்சைகள் எழுதினாலும்
நான் வாங்கும் ஸ்கோரை
ஒருபோதும் மதிக்காமல்
நீ வாங்கும் ஸ்கோரையன்றோ
முப்போதும் மதிப்போம் !!

இருநூறு எடுத்தாலும்
இருபது ரன் எடுத்தாலும்
கடவுளைப் போலுன்னைக்
கும்பிட்டு நிற்போமே !!

இந்தியாவின் 29 ஆவது
மாநிலம் நீயல்லவா !!
எல்லா மாநிலமும்
நீயே அல்லவா !!

நாட்டின் ஆசையெல்லாம்
உன்னாசை தானே !!!
உன்னாசை எல்லாம்
நாட்டாசை தானே !!!

விளையாடும் போது
உனக்கு இந்தியா தொப்பி ;
விளையாட்டில் நீயே
இந்தியாவின் தொப்பி ;

விளையாடும் போதும்
விளையாடா விட்டாலும்
அந்தத் தொப்பி
இறங்கு வதில்லை ;

நீருள்ளவரை, நிலமுள்ளவரை,
வாழ்க நின் நாமம் !!
வளர்க நின் புகழ் !!

ஐந்துநாள் போட்டியில்
மீண்டும் சந்திப்போம் ;

No comments:

Post a Comment