Monday, January 7, 2013

இசைத்தமிழா : பாடல் வரிகள்




பல்லவி

ஐரோப்பா USA ASIA எங்கிலும் துள்ளித் திரியும் என்றும் உந்தன் இசை தானே
பேஸ்புக்கில் எப்.எம் மில் டி.வி யில் கேட்பது இசைப்புயலாய் வரும் உன் குரல் தான்

ரோஜாவில் பூத்தது உன்விரல் மெல்லிசை
"கடல்"களிலும்  அதன் வாசனை

ஆயிரம் ஆண்டுகள் தாண்டியும் உன்னிசை
அலை போல வரும்

கோரஸ் :

என்றும் மனதில் துள்ளும் ஒருமான்
அம்மான் ஏ.ஆர் ரகுமான்
மூன்றே எழுத்தில் உலகம் எதுவோ
அது தான் ஏ. ஆர். ரகுமான்

சரணம் 

துல்லியமாய் என்றும் நின்றிடும் பாடல் தந்திடுவாய்
அற்புதமாய் நெஞ்சிலே

மந்திரமாய் உந்தன் பாடலை ஆகிடச் செய்திடுவாய்
நிச்சயமாய் வெற்றி  நீ பறிப்பாய்

நீ இசைக்கும் பாடல் நம்பிக்கையே
அதனால் ஜொலிக்கும் நம் வாழ்க்கையே

   உன் படங்கள் நெஞ்சில் ஓர் தாக்கமே
   அது தான் நினைவைத் தாலாட்டுமே

என்றும் மனதில் துள்ளும் ஒருமான்
அம்மான் ஏ.ஆர் ரகுமான்
மூன்றே எழுத்தில் உலகம் எதுவோ
அது தான் ஏ. ஆர். ரகுமான்

No comments:

Post a Comment