Wednesday, January 11, 2012

நின்று போன வண்டி


இன்று ரோட்டில்
என் பக்கத்தில் - ஒரு
முக்காடு அணிந்த
பூக்காடு போனது - கண்
வேக்காடு ஆனது - கொடும்
சாக்காடு ஆனது ; இனி
எக்காடு சென்றாலும்
இக்காடு கிடைக்குமா ?

திக்கெட்டும் பறந்த
முக்காடால் நான்
திக்கு முக்காடிப் போனேன் ;

வீசிய காற்றில்
முக்காடும் திறக்கவில்லை ;
முழுமுகமும் தெரியவில்லை - அந்த
முக்காடால் என்நெஞ்சம்
முட்காடாய் ஆனது ;

நான் விடவில்லை
அவளருகில் சென்றேன் ;
Coolers அணிந்திருந்தாள் ;
அவளையே பிடித்திருந்தாலும்
அது ஒன்று தான்
அவளிடம் பிடிக்கவில்லை ;

பாதை வளர்ந்தது ;
சற்று நேரத்தில்
சிக்னல் விழுந்தது ;

சிவப்பு சிக்னலை
எனக்கு இன்று
தான் மிகவும்
பிடித்திருந்தது ;

சிக்னல் மாறியதும்
அந்தப் பூ
விருட்டென்று பறந்தது ;

அவள் வண்டி சென்று விட்டது ;
என் வண்டி நின்று விட்டது ;

என் செய்ய ?

அப்படியே நின்றுவிட்டால்
மேலாளர் திட்டுவாரென
வண்டியைக் கிளப்பி
அலுவலகம் வந்துவிட்டேன் ;


1 comment:

  1. பூக்காடு கவிதை அருமை அருமை...

    வாழ்த்துக்கள் தோழரே

    ReplyDelete