Thursday, May 19, 2011

ஃபிகரும் ஃபாரெக்ஸும் - ( தமிழில் குமரியும் குழந்தையும்)


இவர்கள் இருவரின்
வருகை சாமான்யப்பட்டதல்ல ;

காற்று வீசுதல் போல்
மழை தூவுதல் போல்

அது வெறும் சம்பவமல்ல -
சரித்திரம் ;

இவர்களின் வருகை
பெரும் ரகசியம் ;

அந்த ரகசியம்
யாருக்கும் தெரிவதில்லை ;
தெரிந்தாலும் அது
ஏனென்று புரிவதுமில்லை ;

ம்ம்...

ரகசியம் ரகசியமாய்
இருந்தால் தானே - அந்த
ரகசியத்திற்கு மதிப்பு !!

மழையைக் கொட்டிய
பின் மேகத்தை
யார் பார்க்கிறார்கள் ?!

உலகில்
இவர்கள் தான்
விளம்பரமில்லாத அதிசயங்கள் ;

குழந்தை - அதிசயங்களில்
முதல் அதிசயம் ;
குமரி - அதிசயங்களில்
முதன்மையான அதிசயம் ;

இந்த அதிசயங்கள்
மற்ற அதிசயங்கள்
போல் கிடையாது ;

மற்ற அதிசயங்கள்
சில நாடுகளில் தான்;
இந்த அதிசயங்களோ
எல்லா நாடுகளிலும்.....

இவர்கள் தலை
கோதினாலே அது
தலைப்புச் செய்தி ;

இவர்கள் கை
வீசினாலே அது
முக்கியச் செய்தி (லஶ் ணெவ்ஸ்) ;

ஆடையணிந்தால்
இவர்கள் அழகு ;
ஆடை களைந்தாலோ
இவர்கள் பேரழகு ;

இவர்களை மட்டுந்தான் - உலகம்
ஆடையோடும் ரசிக்கும்
ஆடையின்றியும் ரசிக்கும் ;

இவர்களின் முன்
அந்த இமயமே
வந்தாலும் சரி - அது
இறகு தான் ;

பொன், பொருள், புகழ்
அவையெல்லாமே இவர்களுக்குப்
பிறகு தான் ;

இவர்கள்
கருத்தில் இடம் பிடிக்க,
மனத்தில் தடம் பதிக்க

நாம் நம்மை
இழக்க வேண்டும் - பிடிக்காவிட்டாலும்
இந்த உண்மை
விளங்க வேண்டும் ;

ஊழிப் பெருங்காற்றைக் கூட
சமாளித்து விடலாம் ;

ஆனால் இந்த
ஊசிக்குள் நூல் சேர்ப்பது
என்பது அத்துணை
சுலபமானதா என்ன ?

நூலை அனுமதியாமல்
ஊசி போவதுமுண்டு ;

ஊசிக்குள் அகப்படாத
நூலோ அதனால்
ஊசிப்போவதுமுண்டு ;

சுருங்கச் சொன்னால்
அவர்கள் நம்மவர்களாக
நாம் "அவர்களாக" வேண்டும் ;

இந்த இருவர் தான்
கவிதைகளுக்கெல்லாம் தோற்றுவாய் ,
கனவுகளுக்கெல்லாம் ஊற்றுவாய் ;

இந்த இருவரில்
ஒருவர் - படைப்பின் அகரம்,
இன்னொருவர் - படைப்பின் சிகரம் ;

கணிப்பொறியில் செய்த
"மென்" பொருள்கள் ஏராளம் - ஆயின்
ஐம்பொறியில் செய்த
மென்பொருள்கள் இவர்கள் தானே !!!

இன்னும் இன்னும்
எழுதிக்கொண்டே போகலாம்...

ஆனால் ஒரு விஷயந்தான்
கொஞ்சம் நெருடலாயிருக்கிறது...

ஒரு
பச்சிளங்குழந்தையை - எளிதில்
எடுத்து தூக்கி
கொஞ்சி முத்தமிட்டு
மகிழ்ந்து கொள்ளலாம் ;

ஆனால் ஒரு
பச்சிளங்குமரியை..... ?!!!





2 comments:

  1. //ஆடையணிந்தால்
    இவர்கள் அழகு ;
    ஆடை களைந்தாலோ
    இவர்கள் பேரழகு ;


    இவர்களை மட்டுந்தான் - உலகம்
    ஆடையோடும் ரசிக்கும்
    ஆடையின்றியும் ரசிக்கும் ;//

    நடைமுறை உண்மை..

    //ஒரு
    பச்சிளங்குழந்தையை - எளிதில்
    எடுத்து தூக்கி
    கொஞ்சி முத்தமிட்டு
    மகிழ்ந்து கொள்ளலாம் ;


    ஆனால் ஒரு
    பச்சிளங்குமரியை..... ?!!!//

    இதில் உங்கள் நகைச்சுவை உணர்வு தெரிந்தாலும் இது இளைஞர்களுக்கே உண்டான ஆதங்கம் :D

    ReplyDelete